கே/தெஹி/ கராகொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 75ம் ஆண்டு நிறைவையொட்டி கிரிக்கெட் சுற்றுப்போட்டி



அஸ்றப் ஏ சமத்-
கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை நகரில் அமைந்துள்ள கே/தெஹி/ கராகொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 75ம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு இடையிலான மூன்று நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த ஏப்ரல் 29,30 மற்றும் மே 01 ஆகிய தினங்களில் எட்டியாந்தோட்டை வின்சென்ட் பெரேரா விளையாட்டரங்கில் பாடசாலை அதிபர் ஏ.எஸ்.எம். பாஹிம் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவ மாணவிகள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 22 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டித்தொடரில் சாம்பியன் பட்டத்தை 2008ம் ஆண்டு சாதாரண தர அணியினர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :