35 வருட கல்வி சேவையிலிருந்து வரதன் இன்று ஓய்வு!



வி.ரி. சகாதேவராஜா-
ல்வி சேவையில் 35 வருடங்களைப் பூர்த்தி செய்த பட்டிருப்பு வலய ஆரம்பக்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் பாலசுந்தரம் வரதராஜன் இன்று (30) செவ்வாய்க்கிழமை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார் .

வெல்லாவெளியைச் சேர்ந்த வரதராஜன் 1988இல் ஆசிரியராக நியமனம் பெற்றார். பட்டதாரியாக முதுகல்விமாணி பட்டதாரியாக வாண்மை விருத்தியை மேற்கொண்டு பட்டிருப்பு வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் முதலுதவி பயிற்றுவிப்பாளராகவும் குடும்ப நல ஆலோசகராகவும் சேவையாற்றி வந்தார்.

ஆரம்ப இடைநிலை கல்வியை வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்திலும் , உயர் கல்வியை பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் கற்றிருந்தார்.

இன்னும் இரண்டு வருட காலம் ஓய்வுக்காக இருக்கையில் அவர் 58 வயதில் இன்று ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :