சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்தி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நல்லிணக்க இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் இன்று (12) சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
நோன்பின் மாண்புகள், சமூக நல்லிணக்கம், சகோரத்துவம், இஸ்லாம் வலியுறுத்தும் வாழ்வியல் தொடர்பில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரும் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய நிறைவேற்று குழு உறுப்பினருமான மௌலவி ஏ.எம். தௌபீக் (நளீமி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்திக்குழு பிரதி செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர் தொகுத்தளித்த இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பழீல், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், நிதி உதவியாளர் எம்.எம். முஹம்மட், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், கலாச்சார மத்திய நிலைய பாடநெறி ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், மூத்த கலைஞர்கள், கலாச்சார மத்திய நிலைய நிர்வாகிகள் , கலை இலக்கியத்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவுரையை கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்திக்குழு செயலாளர் கலைஞர் அஸ்வான் எஸ். மௌலானா நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment