நிந்தவூர் பிரதேச விவசாய நிலங்களுக்கு செல்லும் கிறவல் வீதி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் விஷனம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
நிந்தவூர் விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட விவசாய நிலங்களுக்கு செல்லும் கிறவல் வீதி சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

நிந்தவூர் பிரதேச சபை வீதியிலிருந்து வீரக்காடு வரை செல்லும் கிறவல் வீதி பலத்த சேதத்திற்குள்ளாகி அதனூடாக விவசாயிகள் பயணிக்க முடியாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் அதில் மழை நீரும் தேங்கியுள்ளது.
தற்போது பெரும் போக வேளாண்மை அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் உழவு இயந்திரங்களோ , நெல் அறுவடை இயந்திரங்களோ பயணிக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதுடன் அறுவடை செய்த விளைபொருட்களை வயலில் இருந்து ஏனைய இடங்களுக்கு கொண்டு செல்லாத நிலமையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு விவசாயிகள் கேட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :