கல்முனை, பாண்டிருப்பில் சக்தி தையல் ஆடைத் தொழிலகம் திறப்பு விழா.


எஸ்.எம்.எம்.றம்ஸான்-
ல்முனை பாண்டிருப்பு 2ல் வாழ்ந்த புலம்பெயர் உறவுகளின் அனுசரனையில் பாண்டிருப்பு 2ல் அமைந்துள்ள ஶ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தின் கட்டிடத்தில் சக்தி தையல் ஆடைத் தொழிலகம் சமய நிகழ்வுடன் திறந்து கைக்கப்பட்டது.

சக்தி ஆடைத் தொழிலகத்தின் இணைப்புச் செயலாளர் சீ.ரவிகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசய ராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இத் தொழிலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தினி யோகேஸ்வரன், விஷேட அதிதியாக சுவிற்சர்லாந்தின் புலம்பெயர் உறவுகளின் பிரதிநிதியும், இந்நிகழ்வுக்கு அனுசரனை வழங்கியவர்களின் ஒருங்கிணைப்பாளருமான இ.விஜயகுமாரன் மற்றும் அதிதிகளாக ஶ்ரீ அரசடியம்மன், ஶ்ரீ சித்தி விநாயகர் ஶ்ரீ வடபத்திர காளியம்மன் கோவில் தலைவர் சி.சண்முநாதன், ஶ்ரீ மகாவிஷ்ணு ஆலய தலைவர் ஆ.செல்லத்துரை, பாண்டிருப்பு 2B கிராம சேவகர் கே.வேதநாயகம் உட்பட மாதர் சங்கத்தினரும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :