75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப் படுகின்ற"இளைஞர்களின் பங்களிப்புடன்
தூய்மை மற்றும் பசுமையான இலங்கை" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டம்,கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை பிரதேச இளைஞர்கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்,நற்பிட்டிமுனை அல்- அக்ஸா மத்திய மகா வித்தியாலயம்,மற்றும் கல்முனை அல் /மிஸ்பாஹ் மகா
வித்தியாலயம் என்பவற்றில் மரநடுகை இன்று(06)இடம்பெற்றது.
இதன் போது அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாரக் அலி,அட்டாளைச் சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரிபீ.எம்.றியாத், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எல். பதூர்தீன்,உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள்,மற்றும் கல்முனை அல் /மிஸ்பாஹ் மகா வித்தியாலயபொறுப்பாசிரியர் அப்துல் சமட்,ஆசிரியர்கள் உட்பட சுற்றாடல் கழக மாணவர்கள்,கல்முனை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் ஆர்.எம்.யசார்,உப தலைவர் எம்.என்.எம்.அப்ராஸ்,உட்பட இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment