75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்றில் சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு



ஏ.எல்.எம். ஷினாஸ்-
ண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நான்கு கட்டங்களாக இடம்பெற்றன.

பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மும்மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன் தேச விடுதலைக்காக உயிர்நீத்தோருக்காக இரு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தற்கால சூழலில் உணவு பாதுகாப்பு செயற்திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பாக பிரதேச செயலாளர் அவர்களினால் 75வது சுதந்திர தின விசேட உரை நிகழ்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து டெங்கு பரவலை தடுத்தல், சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பசுமை மேம்பாடு அடிப்படையில் அலுவலக வளாகத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த நிகழ்வாக களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் 75 வகையான பழமரக் கன்றுகள் நடுகை செய்யப்பட்டதுடன், நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட்டு சுபீட்சமான வாழ்க்கைக்கான பூசை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இறுதி நிகழ்வாக களுதாவளை 4 சாந்திபுரம் கிராம சேவகர் பிரிவில் இடர்களை எதிர்கொள்ளும் 75 குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் வாழ்வாதார உதவிகள், கடன் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர், மாதர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :