75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமூக நலனை கருத்தில் கொண்டும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, பொத்துவில் ஆதார வைத்தியசாலை மற்றும் இரத்த தான ஒருங்கிணைப்பாளர் ஏ.எச்.எம்.சிபாஸ் அவர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்த முகாமானதும் 75ஆவது சுதந்திர தினத்தில் (04.02.2023) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் Recreation center ல் காலை 9 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை நடைபெற்றது.
இதில் தென் கிழக்கு பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் இனமத பேதமின்றி தமது பங்களிப்பை வழங்கியிருந்தது மட்டுமின்றி அவர்களே முன்வந்து இரத்தம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 90 பேர் தங்களது இரத்தங்களை தானம் செய்திருந்தனர்.இது சமூக நலனை கருத்தில் கொண்டு செயற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி திட்டம். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment