போதைப்பொருள் வியாபாரியை கைது செய்யுமாறு கோரி தனிநபர் ஒருவரினால் இன்று (22) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்தே இந்த போராட்டத்தை சேகு இஸ்மாயில் முகம்மது நஸ்லி எனும் நபர் முன்னெடுத்தார்.
ஓட்டமாவடி - மீராவோடை பகுதியைச் சேர்ந்த இவர், அப்பகுதியிலுள்ள வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவ் வியாபாரி பலமுறை கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்றும் போராட்டக்காரர் தெரிவித்தார்.
பெருகி வரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைகளை கட்டுப்படுத்தி இளைஞர்களை பாதுகாக்க வேண்டியே, தனிநபராக நின்று இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மேலும் தெரிவித்தார்.
"மீராவோடை பிரதேசத்திலும் போதையை ஒழிக்க வியாபாரிகளை கைது செய்" , "எங்களது இளைஞர் சமூகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்" ,
அரசே! பொலிஸாரே! தயவு செய்து அவசரமாக நடவடிக்கை எடுங்கள். எனும் வாசகத்தை ஏந்தியவாறு அந்நபர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த பொலிஸார் போராட்ட நபரிடம் பேர்ச்சு வார்த்தையில் ஈடுபட்டு குறித்த விடயம் தொடர்பாக கவனத்தில் எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment