மட்டக்களப்பு மாவட்ட சைக்கிள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சமூகசெயற்பாட்டாளர் I. பிறேம்நாத் தலமையில்யாழ்ப்பாணம் வவுனியா முல்லைத்தீவு மட்டக்களப்பு போன்ற பகுதியில் இருந்து வீரர்கள் பங்கு பற்றினர்.
இந்த போட்டியை தொடக்கி வைப்பதற்காக பிரதம அதிதியாக செங்கலடி பிரதேசசெயலாளர் K.தனபால சுந்தரம், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்பரன் மற்றும் ஏறாவூர் உப பெலிஸ் பொறுப்பதிகாரி அஷரப் காரியப்பர் அவர்களும் செங்கலடி விளையாட்டு உத்தியோகத்தர் சங்கிதா அவர்களும் செங்கலடி பிரதேச சுகாதார துறை அதிகாரி ஏறாவூர் செங்கலடி திடிர்மரணவிசாரனை அதிகாரி Ms.நஷீர் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த சைக்கிள் ஓட்ட போட்டியில் முதலாவது இடத்தினை மட்டக்களப்பை சேர்ந்த I.ராஜ்குமார் அவர்களும் இரண்டாம் இடத்தினை வவுனியாவை சேர்ந்த W.p.L மதுசங்க அவர்களும் மூன்றாம் இடத்தினை யாழ்ப்பாணத்தினை சேர்ந்த B.கிரிஸ்ணா அவர்களும் பெற்று கொண்டனர்
இவர்களுக்கு பெறுமதியான பணபரிசில்களும் சான்றிதள்களும் வழங்கப்பட்டது. இந்த சைக்கிள் ஓட்ட போட்டியை சிறப்பாக நடார்த்தி முடித்த மட்டக்களப்பு மாவட்ட சமூகசெயற்பாட்டாளரும் மட்டக்களப்பு மாவட்ட சைக்கிள் ஓட்டச் சங்கத்தின் தலைவரான I பிறேம்நாத் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment