ரத பவனியுடன் சிறப்பாக இடம்பெற்ற சுவாமி விவேகானந்தர் ஜெயந்திவிழா!



வி.ரி. சகாதேவராஜா-
ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வங்கத்தின் சிங்கம் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 161 வது ஜெயந்தி தின விழா மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
சுவாமியின் திருவுருவப் படம் தாங்கிய ரத பவனி மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதி ஊடாக ஊர்வலம் வந்தது.

கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் மற்றும் பழைய மாணவர் இராமகிருஷ்ண மிஷன் அபிமானிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் .
அதைத்தொடர்ந்து கல்லடி மிஷன் குருகுலத்தில் விசேட யாகம் ஹோமம் பூஜை பஜனை என்பன இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :