காரைதீவில் வர்த்தகர்கள் சங்கம் அங்குரார்ப்பணம்.




வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவில் முதன்முறையாக வர்த்தகர் சங்கம் இன்று (6) வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் முன்னிலையில் இந்த உருவாக்கக்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது காரைதீவில் உள்ள வர்த்தகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தலைவராக முன்னாள் உதவிதவிசாளர் க.தட்சணாமூர்த்தி தெரிவு செய்யப்பட்டார். ஏனைய நிர்வாக சபை உறுப்பினகளும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
தெரிவு செய்யப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உபசெயலாளர் வருமாறு..

தலைவராக க. தட்சணாமூர்த்தி செயலாளராக கே. குகனேஸ்வரன்
பொருளாளராக கே. மேகலா உப தலைவராக ரி. துரைராஜா உபசெயலாளராக பி. தசதரா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் 21 சிரேஷ்ட உறுப்பினர்களையும் 298 அங்கத்தவர்களையும் கொண்ட இச் சங்கம் காரைதீவு 1-12 பிரிவுகளை உள்ளடக்கிய வர்த்தக சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :