நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பசுப் பால் வழங்கி முதல் நாள் கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வு



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தினை உருவாக்குவதற்கான அரச சேவை உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ் ரங்கநாதன் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் தலைமையில் செயலக வளாகத்தில் இன்று (02.01.2023) இடம்பெற்றது.

இதன்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்காக இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், புதிய ஆண்டுக்கான உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணமும், கடந்த ஆண்டின் வேலைத்திட்டங்கள் காடசிப் படுத்தப்பட்டு பதவிநிலை உத்தியோகத்தர்களின் விசேட உரையும் இடம்பெற்றது.

இதில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன், கணக்காளர் கே.றிஸ்வி யஹ்ஸர், நிருவாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ் சிவம் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :