நாவிதன்வெளி பிரதேச சபைக்கான எல்லை நிர்ணயத்தின் போது முஸ்லிங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பிலும், முஸ்லிங்களுக்கான முறையான எல்லை நிர்ணயம் ஒன்றை அமைக்கவேண்டியதும், வட்டார பிரிப்புகளின் தேவைகள் தொடர்பிலும் ஆராயும் கலந்துரையாடலொன்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பங்கெடுப்புடன் மத்தியமுகாமில் இன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது நாவிதன்வெளி பிரதேச சபைக்கான எல்லை நிர்ணயத்தில் மாவட்ட எல்லை நிர்ணய குழுவினர் மேற்கொண்டுள்ள பாராமுகமான செயற்பாடுகள் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டதுடன் நாளை (03) அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெறவுள்ள எல்லை நிர்ணயம் சம்பந்தமான கூட்டத்தில் வலியுறுத்தவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் ஏ.கே. அப்துல் சமட், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. நவாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளர் ஏ.சி.எம். நிஸார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளர் எம்.எம்.மஹ்ரூப், மத்தியமுகாம் வட்டார ஸ்ரீ.ல.மு.கா அமைப்பாளர் நௌபர், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment