ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (22.01.2023) முழு நாளும் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பிரதேச செயலக புதிய கட்டிடத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது உத்தியோகத்தர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்குமாக சங்கீத கதிரை, பலூன் உடைத்தல், தேசிக்காய் ஓட்டம், முட்டி உடைத்தல், யோகட் தீர்த்துதல் போன்ற விளையாட்டுக்கள் இடம் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கடந்த வருடம் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களும் ஓய்வூதியம் பெற்றுச் சென்றவர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வுகளில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment