ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடி தொடர்ந்து சிரமதானம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி மஜ்மா நகர் கொவிட் மையவாடி சிரமதானப் பணி கட்டம் கட்டமாக இரு வாரங்களாக இடம் பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் இரண்டாவது முறையாகவும் மஜ்மா நகர் கிராம மக்களினால் இன்று செவ்வாய்க்கிழமை துப்பரவு செய்யப்பட்டது.

கோறளை பற்று மேற்கு பிரதேச செயலாளர் வி.தவராஜாவின் வேண்டுகோளுக்கு அமைவாக மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கொரோனாவினால் மரணித்தவர்களின் ஜனாஷாக்கள் அடக்கப்பட்ட இடம் இரண்டாவது முறையாகவும் மஜ்மா நகர் கிராம மக்களினால் துப்பரவு செய்யப்பட்டது.

இதற்கான உபசரனைகள் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு சகோதரரினால் ஏற்பாடு செய்யப்பட்டது
இதற்கு ஒத்துழைப்பு புரிந்த அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.அஎல்.சமீம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :