58 மாணவர்களை சுனாமியில் இழந்த மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும் !



மாளிகைக்காடு நிருபர்-
சுனாமிப்பேரலையில் 58 மாணவர்களை இழந்த கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும் பாடசலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர் தலைமையில் பாடசலையில் இன்று (26) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளரும், மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் பிரதம பேச்சாளாராக கலந்துகொண்டு மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய 58 மாணவர்களின் இழப்பு, சுனாமி இலங்கைக்கு ஏற்படுத்திய வடுக்கள், சுனாமிக்கு பின்னர் அப்பாடசாலையின் மீள் உருவாக்கம், பாடசாலை மாணவர்களின் கல்வி நிலைகள், சமகாலத்தில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கௌரவங்கள், மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய உருவாக்கத்தில் பாடுபட்டோர்கள் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதியதிபர் ஏ.எம். நளீம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :