துரித உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் தானிய பயிர்கள் நிந்தவூரில் வழங்கி வைப்பு



காரைதீவு சகா-
மகால பொருளாதார நெருக்கடி தீர்வாக அரசினால் முன்வைக்கப்பட்ட துரித உணவு உற்பத்தி திட்டம் தீவிரமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் நிந்தவூர் விவசாய போதனாசிரியர் பிரிவில் வீட்டு தோட்டத்தில் பயிரிடப்படும் தானிய பயிர்களான சோளன் பயறு கௌபி நிலக்கடலை குரக்கன் போன்ற விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு நிந்தவூர் விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்றது.

தொழில்நுட்ப உதவியாளர் எம் எம் ஏ நவாத் நெறிப்படுத்திய இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று வலய உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் வலய பாடவிதான உத்தியோகத்தர் எம். கோகுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டன.
மேலும் தானிய பயிர்களின் நடுகைமுறை பசளையிடல் நோய் பீடை பரிபாலனம் அறுவடை முறை பற்றி விவசாய போதனாசிரியரால் பூரண விளக்கம் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :