போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு



போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் இச்செயலமர்வு சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது இச்செயலமர்வின் வளவாளர்களாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரியும் பெண் பிரதம பொலிஸ் பரிசோதகருமான டயனி கமகேயும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்செயலமர்வின் போது போதைப்பொருளின் தாக்கங்கள் சமூக ஊடகங்களின் தாக்கங்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இச்செயலமர்வில் பாடசாலை அதிபர் எம்.எல் பதியுதீன் பிரதி அதிபர் ஏ.எம் சாலிதீன் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :