ரோட்டரி - 3220 ஆளுநர் அவர்களின் திருகோணமலை விஜயம்


ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் புபுது டி சொய்சா (Pubudhu de Zoysa) 15-10-2022 அன்று, திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார்.

ஆளுநரின் செயலார் திரு குமார் சுந்தராஜ் அவர்களும் மற்றும் உதவி மாவட்ட செயலார் திரு அஜித் ஜெயவிக்கரமாவும் அவருடன் இணைந்து கொண்டார்கள் .

திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - கிட்ணதாஸ் விருந்தினர்களை வரவேற்று, வரவேற்புரையை நிகழ்த்தினார் .

செயலாளர் S. ஜெய்சங்கரினால் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளின் அறிக்கை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

புதிய உறுப்பினராக செலான் வங்கி மேனேஜர் - திரு. .S. .ஹரிதவர்ணன் அவர்கள் திருகோணமலை ரோட்டரி கழகத் தில் இணைந்து கொண்டார்.

ஆளுநர் புபுது டி சொய்சா, தமது உரையில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக தரமான இளம் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

2023-2024 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட வைத்தியர் சௌந்தரராஜன் நன்றியுரை நிகழ்த்தினார்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :