கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை 14 பதக்கங்களுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவாகி சாதனை




எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை சாஹிரா தேசிய பாடசாலை கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 14 பதக்கங்களுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவாகி சாதனை நிலை நாட்டியுள்ளனர்.

கடந்த 5 ம் திகதி தொடக்கம் 9 ம் திகதி வரை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாடசாலை களுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவர்கள்
4 தங்கப் பதக்கங்கள்,
4 வெள்ளிப் பதக்கங்கள்,
6 வெண்கலப் பதக்கங்களை வென்று பாடசாலைக்கும் கல்முனை பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளதுடன் கிழக்கு மாகாண றிலே சம்பியனாகவும் (Relay Champion) இப்பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவர்களை சிறப்பாக வழிநடத்திய அதிபர் முஹம்மட் ஜாபிர், பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், போட்டியில் பங்கேற்று தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :