ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பும்



எஸ்.எம்.எம். முர்ஷித்-
கோறளைப்பற்று மேற்குஇ ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் பாசிக்குடா கடற்கரையோரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்இ நலன்புரிச்சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றதுடன்இ இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள உத்தியோகத்தர்கள் கௌரவிப்புஇ ஊழியர்களின் கலைஇ கலாசாரப்போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விசேட அம்சமாக கடந்த காலத்தில் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப்பணியில் இரவுஇ பகலாக தியாகத்தோடு பணியாற்றிய கோறளைப்பற்று மேற்குஇ ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டுஇ நினைவுச்சின்னங்களை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வழங்கிக் கௌரவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :