எழுத்தாளர்கள் வாண்மை விருத்திச் செயலமர்வு


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இன்று 11.09.2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 முதல் பி.ப.1.00 மணி வரை கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கியிருந்தார் மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன்.

பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, பேராசிரியர் செ.யோகராசா, எழுத்தாளர் ஜிப்ரிஹாசன், கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்

இங்கு ஆரம்ப நிகழ்வுகளாக மங்கல விளக்கேற்றலோடு விருந்தினரை வரவேற்றல், வரவேற்புரையும் தலைமையுரையும், எழுத்தாளர்கள் அறிமுகம், கவி பாடும் நிகழ்வு, பிரதம அதிதியுரை, எழுத்தாளர்கள் விரிபடு எல்லைகள், ஆவணப்படம் திரையிடல், எழுத்தும் திசை நோக்கும், கலந்துரையாடல், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் என்பனவற்றுடன், இறுதியாக நன்றியுரைடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று முடிவடைந்தது.

குறிப்பாக, இந்நிகழ்வில் இளம் கலைஞர்கள் அதீத அக்கறையுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டதைக் காண முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :