தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிந்து விட்டால் பிள்ளைகளின் கல்வி முடிந்து விட்டது என்று அநேகமான பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதி சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
பெற்றோர்கள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் போது காட்டும் ஆர்வத்தை ஏனைய பரீட்சைகளிலும் காட்ட வேண்டும்.
பெற்றோர்களுக்கு என்னதான் வேலைகள் இருந்தாலும் புலமைப் பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகள் சித்தியடைய வேண்டும் என்பதற்காக பாடுபடுகின்றனர்.
பரீட்சை முடிந்த பின்னர் ஏராளமான பெற்றோர்கள் மாணவர்களை கவனிப்பதில்லை.
தமது பிள்ளைகள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரமான பெரிய பாடலைகளில் சேர்த்து விட்டால் அத்தோடு தமது கடமை முடிந்து விட்டது என்று பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
மாணவர்கள் விடயத்தில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய சூழலில் மாணவர்கள் ஸ்மாட் போன் பாவனையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் போன்களில் கேம் விளையாடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் பாதிப்படைகின்றனர்.
எனவே, பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் விடயத்தில் கூடுதல் கவனம் எடுத்து பிள்ளைகள் நல்ல பிரஜைகளாக உருவாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment