பற்றிமாவிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் 126 மாணவர்களுக்கு பாராட்டு .



காரைதீவு சகா-
கிழக்கின் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலிருந்து, இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக இருக்கும் 126 மாணவர்களுக்கான பாராட்டு விழா நேற்று அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அடிகளார் தலைமையில் நடைபெற்றது .

கடந்த வாரம் வெளியான கபொத உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, பல்கலைக்கழகம் செல்லலாம் என்ற உத்தேசத்தில் இந்த 126 மாணவர்களும் பாடசாலை அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்

இதில் , உயிரியல் விஞ்ஞான துறையில் 20 மாணவர்களும், கணித பிரிவில் 24 மாணவர்களும், வர்த்தக பிரிவில் 30 மாணவர்களும், கலை பிரிவில் 31 மாணவர்களும் ,உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 13 மாணவர்களும் ,பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் 8 மாணவர்களுமாக மொத்தம் 126 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

இதன்போது ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :