பற்றிமாவிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் 126 மாணவர்களுக்கு பாராட்டு .



காரைதீவு சகா-
கிழக்கின் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலிருந்து, இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக இருக்கும் 126 மாணவர்களுக்கான பாராட்டு விழா நேற்று அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அடிகளார் தலைமையில் நடைபெற்றது .

கடந்த வாரம் வெளியான கபொத உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, பல்கலைக்கழகம் செல்லலாம் என்ற உத்தேசத்தில் இந்த 126 மாணவர்களும் பாடசாலை அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்

இதில் , உயிரியல் விஞ்ஞான துறையில் 20 மாணவர்களும், கணித பிரிவில் 24 மாணவர்களும், வர்த்தக பிரிவில் 30 மாணவர்களும், கலை பிரிவில் 31 மாணவர்களும் ,உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 13 மாணவர்களும் ,பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் 8 மாணவர்களுமாக மொத்தம் 126 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

இதன்போது ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :