தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம்.பைசல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், பாடசாலை வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் அதிபர், கற்பிக்கும் ஆசிரியர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜுன் நிஸா, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.யூ.எம்.இஸ்மாயில், ஏ.எம்.ஜாபீர் கரீம் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பாடசாலை அபிவிருத்தி குழுவினர் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment