வழக்கமான கேவலமான அரசியல் கலாசாரத்தை மீண்டும் கொண்டு வந்து நாட்டின் 220 இலட்சம் மக்களை மீண்டும் துன்பத்திற்கு உள்ளாக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,
அதிகாரமளிக்கப்பட்ட நிறைவேற்று பாராளுமன்ற குழுக்கள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதோடு, அமைச்சு பதவிகளை பெற்று அதன் சுமையை மக்கள் மீது பாரப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், பாராளுமன்றத்தில் அதிகாரத்துடன் கூடிய குழுக்களின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களைப் போன்று நப்பாசையிலான அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள கவனம் செலுத்தாமல், எமது நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கான பொதுவான வேலைத்திட்டத்திற்கு ஆதரவை நல்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2019 ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எடுத்த தவறான முடிவினால் ஒரு தோல்வியுற்ற ஆட்சியாளர் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார் எனவும், அவரது பலவீனமான ஆட்சியினால் முழு நாடும் அனாதரவாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தெரணியகல தேர்தல் தொகுதி அமைப்பாளர் ரஞ்சித் பொல்கம்பல அவர்களின் தொகுதிக்கூட்டம் இன்று (06) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் அப்பகுதி ஏராளமான பிரதேச வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.
தற்போது நாட்டில் 220 இலட்சம் பேர் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகவும், பிடிவாதமும்,ஆணவமும்,மனசாட்சி இல்லாத, செயல்பட முடியாத அரசொன்றின் செயல்களே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
2019 டிசம்பரில் நாடு இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு வர 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் எனவும், 2 மாதங்கள், 3 மாதங்களில் நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற கனவுக் கதைகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும் அவ்வாறு கூறுவது பொய்யானது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பொய்க்கு இடமளிக்கக் கூடாது எனவும், எமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் 220 இலட்சம் பேர் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகவும், பிடிவாதமும்,ஆணவமும்,மனசாட்சி இல்லாத, செயல்பட முடியாத அரசொன்றின் செயல்களே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
2019 டிசம்பரில் நாடு இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு வர 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் எனவும், 2 மாதங்கள், 3 மாதங்களில் நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற கனவுக் கதைகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும் அவ்வாறு கூறுவது பொய்யானது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பொய்க்கு இடமளிக்கக் கூடாது எனவும், எமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment