அட்டாளைச்சேனையில் பெண் தலைமைக் குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதி வழங்கல்!



எfப்.அப்ஸத் அயாஷ்-
ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (26) இடம்பெற்றது.
இஸ்லாமிக் ரிலிப் நிறுனத்தின் அவசர உணவு மற்றும் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 40 பெண் தலைமை குடும்பங்களுக்கு இப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனைப் பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ. நூறுள் ஹூஸ்னாவின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச உதவிப் பிரதேச செயலாளர்
எfப்.நஹீஜா முஸாபிர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்களான எம்.எச்..சுப்ஹான், ஜி.சுஹிர்தினி மற்றும் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி கள உத்தியோகத்தர் I. கிசோர் ஜஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :