தூண்டிலில் சிக்கிய பாரிய எடையுள்ள கொடுவா மீன்



பாறுக் ஷிஹான்-
25 கிலோ பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிறிய இயந்திர தூண்டிலில் சிக்கியுள்ளது.
இன்று அம்பாறை மாவட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளை இணைக்கும் முகத்துவாரத்து கடற்கரையில் இரு இளைஞர்கள் கடலில் தூண்டில் மூலம் குறித்த மீனை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.

சுமார் 18 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய குறித்த மீன் தூண்டிலில் சிக்குண்டு கடலில் அட்டகாசம் காட்டியதுடன் இளைஞர்கள் குறித்த மீனை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வருவதற்கு பெரும் சிரமங்களை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் அம்பாறை மாவட்ட கடற்கரையில் பருவ மாற்றம் காரணமாக அதிகளவில் மழை பெய்து வருவதுடன் சில முகத்துவாரங்களும் வெட்டப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பொழுதுபோக்கிற்கான சிலர் தூண்டில் மூலம் அப்பகுதியில் மீன்களை பிடித்து வருவதனை காண முடிகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :