திருடிய நகைகளை அடகு வைத்தவர் கைது



எச்.எம்.எம்.பர்ஸான்-
கை திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் நபரொருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றில் கடந்த 26 ஆம் திகதி சுமார் 6 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.
இவ்வாறு திருடப்பட்ட நகைகளை கண்டுபிடிக்க பொலிஸாருடன் இணைந்து நகை உரிமையாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், திருடப்பட்ட நகைகளை தனியார் அடகு நிலையம் ஒன்றில் நபரொருவர் அடகு வைக்கச் சென்றபோது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :