கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழக நிர்வாக அறிமுகமும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (21) இடம்பெற்றது.
கழகத்தின் தலைவர் ஐ.எம்.றிஸ்வி தலைமையில் இந்நிகழ்வு பொத்தானை பகுதியில் இடம்பெற்றது.
இதில், கழக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வரும் நபர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் எனப்பலரும் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், அதிதிகளாக சட்டத்தரணி ஹபீப் றிபான், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ் ஹாஜி, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஐ.றியாஸ் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment