எல்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் நீம் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு



மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்-
ற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் ஹாலியல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பழைய தோட்ட குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, தோட்ட நல அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து வழங்கி வைத்தனர்.

இதற்கான நிதியுதவியினை லண்டன் எல்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் Neem நிறுவனம் வழங்கி வைத்திருந்தனர். இதனை பிரன்லி சிப் பௌன்டேசன் மற்றும் நியூ சன் ஸ்டார் யூத் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :