திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சமுர்த்தி வங்கிக்கான புதிய கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு முள்ளிப்பொத்தானையில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று (13) காலை இடம் பெற்ற இவ் அடிக்கல் நடும் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலாளர் பி.எச்.என்.ஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார். மத அனுஷ்டானத்துடன் இடம் பெற்ற கட்டிட நிர்மான அங்குரார்ப்பண வைபவமானது சுப நேரப்படி காலை 10.22 க்கு அங்குராரப்பணம் செய்து வைக்கப்பட்டது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஊடான நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ் சமுர்த்தி வங்கிக் கட்டிடமானது திருகோணமலை கண்டி பிரதான வீதி முள்ளிப்பொத்தானையில் உள்ள வங்கிக்கு சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளது
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார, மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுதீஸ்னர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் கே.நபீல், தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமைமாளர் ஏ.ஆர்.எம்.சித்திக்,வங்கி முகாமையாளர் எம்.ஏ.ஹஸ்புல்லா உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment