பாகிஸ்தான் நாட்டின் 75வது சுதந்திரதினம் இன்றாகும். இதனை முன்னிட்டு கொழும்பிலுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திரதின நிகழ்வுகள் மிக எளிமையாக இன்று நடைபெற்றது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர்பாரூக் பர்கி கலந்துகொண்டு பாகிஸ்தான் நாட்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் செபீஸ் செரீபின் சுதந்திரதின செய்தியை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடக இணைப்பாளர் கல்சூம் கைசர் வாசித்தார். பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியின் சுதந்திரதின செய்தியை உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தக இணைப்பாளர் அஸ்மா கமால் வாசித்தார்.
இதன்போது சுதந்திரதின ஞாபகார்த்தமாக கேக்கும் வெட்டப்பட்டது. இதன்போது உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளும் உயர் ஸ்தானிகருடன் இணைந்து கேக்கை வெட்டியமை குறிப்பிடத்தக்கது.
இதில் பாகிஸ்தான் உயர்தானிகராலய அதிகாரிகள், ஊழியர்கள், இலங்கை வாழ் பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் மற்றும் முக்கிய பிரமுகர்ககள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment