மோட்டார் வாகனங்களின் இலக்கத்தகடுகளின் இறுதி எண்ணின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அதனடிப்படையில் செங்கலடி Co-op எரிபொருள் நிலையத்தின்னூடாக மிகச்சிறப்பான முறையில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் வினியோகிக்கப்பட்டது.
இவ்வெரிபொருள் விநியோக நடவடிக்கையின் போது ஆயிரத்திற்கும் அதிகமானோர் தமக்கான எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர்.
இதே வேளை, அன்றைய தினம் நிலையத்தின் ஒழுங்குபடுத்தலுடன் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் நிலைய உரிமையாளர் பலநோக்கு கூட்டுறவு சங்க(Co-op) எரிபொருள் நிரப்பு Co-op மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் பொதுமக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment