வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை கோரக்கோயில் அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் நேற்றுமுன்தினம் (13) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. .
கொரோனாவிற்கு பின்னர் இந்த சடங்கு, கடந்த 10 நாட்கள் நடைபெற்று நேற்று 800 அடியார்கள் தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெற்றது.
ஆலய தலைமைப் பூசகர், மாரியின் மைந்தன் மு.ஜெகநாதன் தலைமையில் கிரியைகள் நடைபெற்றன..
நேற்று முன்தினம் 13 ஆம் தேதி புதன்கிழமை காலை 8 மணி அளவில் மஞ்சள் குளித்து தீ மிதித்தல் அம்பாள் அருளால் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது என்று ஆலய பரிபாலன சபை தலைவர் ம. பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment