சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழக வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய சீருடை அறிமுக நிகழ்வும் !



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் (Eastern Fighters) கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் மற்றும் புதிய சீருடை அறிமுக நிகழ்வு புதன்கிழமை சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலையத்தில் விளையாட்டு பாட ஆசிரியரும், கழக அமைப்பாளருமான எம்.எச்.எம். முஸ்பீக் மற்றும் கழக முகாமையாளர் அப்ரத் அலி ஆகியோரின் நெறிப்படுத்தலில் கழக செயலாளர் லாபீர் முஹம்மட் ஷிப்னாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர பிரதி முதல்வரும், ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு கழக சீருடையை அறிமுகம் செய்து வைத்தவுடன் கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்களையும், கழக மேம்பாட்டுக்கான உதவித்தொகையையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவக சம்மாந்துறை நிலையத்தின் விரிவுரையாளர் எம்.பி.நௌஸாத், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளர் ஊடகவியலாளர் யூ.எல்.என். ஹுதா, சாய்ந்தமருது கிரிக்கெட் சம்மேளன செயலாளரும், விளையாட்டு உத்தியோகத்தருமான ஏ.எம்.ரிஷாட் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தியதுடன் 19 வயதிற்குட்பட்ட அம்பாறை மாவட்ட அணிக்கு தேர்வான வீரர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.

மேலும் நிகழ்வின் விசேட அதிதிகளாக நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்த பிஸ்மில்லாஹ் ஹோட்டல் சார்பிலான பிரதிநிதிகள், ரஹ்மத் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் அகில் மன்ஸூர், சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியும் இளைஞர் சேவை அதிகாரியுமான எம்.டீ.எம். ஹாரூன், டொப் குயின் நிறுவன உரிமையாளர் எம். மர்லியாஸ், சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழக தலைவர் எம். சுபைர், ரெட் மெக்ஸ் உரிமையாளர் ஏ.என்.எம். ஜலூத், கடாகோ ஏ.எம்.வஸீர், சன்பிளவர் விளையாட்டுக் கழக செயலாளர் அஸ்வர் அப்துல் ஸலாம், மியண்டாட் விளையாட்டுக்கழக அணித் தலைவர் ஏ.எச்.எம். முர்ஸித் மற்றும் ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் விளையாட்டுக் கழக நிர்வாகத்தினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :