கருப்புச் சந்தையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சாய்ந்தமருதில் ஆராய்வு



நூருல் ஹுதா உமர்-
பெற்றோல் விநியோகத்தில் முறைகேடுகளை இல்லாதொழிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று சாய்ந்தமருது பிரதேச செயலக ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் இன்று 19 நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.எம். சம்சுதீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், சாய்ந்தமருது லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலைய நடத்துனர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட செயலியை செயல்படுத்தும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதிலே நடைமுறைச் சாத்தியமான பல முடிவுகள் நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்டதுடன் முடியுமான அளவு கருப்புச் சந்தையை குறைப்பதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் விநியோக செயற்திட்டம் நடைமுறைக்கு வரும் வரை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி நடைமுறையில் இருக்கும் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் இதன்போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :