கோரக்கோயில் அகோர மாரியம்மன் ஆலய தீமிதிப்பு சடங்கு ஆரம்பம் .



வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை கோரக்கோயில் அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கும், தீமிதிப்பு வைபவமும் இன்று (3) ஞாயிற்றுக்கிழமை கடல் நீர் எடுத்து வந்து ,கதவு திறத்தலோடு ஆரம்பமாகியது .
இந்த சடங்கு, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று 13ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை தீமிதிப்பு இடம்பெறும் .

ஆலய தலைமைப் பூசகர், மாரியின் மைந்தன் மு.ஜெகநாதன் தலைமையில் கிரியைகள் ஆரம்பமாகின.
நாளை திங்கட்கிழமை காலை ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து உபயகாரர் தவிசாளர் கி.ஜெயசிறில் பங்கேற்புடன் பால்குடபவனி இடம்பெறும் .

ஆறாம் தேதி புதன்கிழமை அம்மன் வீதி உலா வருதல் நிகழ்வும் தொடர்ந்து 11-ஆம் தேதி திங்கட்கிழமை வெளிவீதி ஊர்வலமும் இடம்பெற்று 13 ஆம் தேதி புதன்கிழமை காலை 8 மணி அளவில் மஞ்சள் குளித்து தீ மிதித்தல் இடம் பெறும் என்று ஆலய பரிபாலன சபை தலைவர் ம. பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :