'அனுபவம் பேசியதே' - சிறப்பு நிகழ்ச்சி கலந்து சிறப்பிக்கிறார் மூத்த ஊடகவியலாளர் லத்தீப் பாருக்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில், புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மனம் திறந்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் 'அனுபவம் பேசியதே' என்ற சிறப்பு நிகழ்ச்சி கொழும்பு, மருதானை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பும் கலந்துரையாடலுமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
இந் நிகழ்ச்சியில், சிரேஷ்ட ஊடகவியலாளரின் சுவாரஷ்யமான அனுபவங்களைப் கேட்டுப் பயனடைவதோடு, கேள்வி - பதில் நிகழ்விலும் கலந்து கொள்ளலாம்.
மாதமொரு முறை நடாத்தத் திட்டமிட்டுள்ள இந்நிகழ்ச்சியின், முதலாவது விருந்தினராக நாட்டின் மூத்த ஊடகவியலாளர்
லத்தீப் பாருக் தனது தேசிய மற்றும் சர்வதேச ஊடக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பி. இப்திகார் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்ச்சியில், விரும்பியவர்கள் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :