காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு



காரைதீவு சகா.-
முள்ளிவாய்க்கால் அவலத்தின் 13ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) புதன்கிழமை காரைதீவில் இடம்பெற்றது .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நிகழ்வு காரைதீவு பொதுச் சந்தை கட்டிடத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
முதலில்,அங்கு நெய்விளக்கு ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ,கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிவஞானம் ஜெயக்குமார் , காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி.சி.ஜெயராணி, ச.சசிகுமார், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர் தா.பிரதீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :