ஓட்டமாவடியில் நோன்பு பெருநாள் தொழுகை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை முஸ்லீம்கள் பெருநாள் தொழுகையில் இன்று செவ்வாய்க்கிழமை (03.05.2022) ஈடுபட்டனர்.

இதன் அடிப்படையில் அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்த திறந்த வெளியிலாளன பெருநாள் தொழுகை இன்று காலை 06.20 மணிக்கு ஓட்டமாவடி மண்ணு ஸல்வா வளாகத்தில் இடம் பெற்றது.

பெருநாள் தொழுகையையும் பெருநாள் கொத்பா பேருரையையும் அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாறூன் ஸகவி நடாத்தியதுடன் மூன்று வருடங்களின் பின்னர் திறந்த வெளியிலாளான தொழுகை இடம் பெற்றதால் அதிகமான ஆண்களும் பெண்களும் இத் தொழுகையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

இதன் போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கும் உலக மக்களின் அமைதிக்காகவும் விஷேட துஆ பிராத்தனையும் அஷ்ஷெய்க் ஹாறூன் ஸகவியால் நிகழ்த்தப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :