ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி பாத்திமா பாலிகா தேசிய பாடசாலையில் இவ்வாண்டில் தரம் 6 இல் சேர்ந்துள்ள புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல் ஹஸன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய மாணவிகளுக்கு பாடசாலை இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பி அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகளின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யூ.எம்.இஸ்மாயில், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரியுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி, ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.சலாம், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான ஐ.ரீ.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இம்முறை குறித்த பாடசாலையில் தரம் 6 இல் இணைந்து கல்வி கற்க சுமார் 182 மாணவிகள் சேர்ந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல் ஹஸன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :