தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய கிராம சேவகர் பிரிவில் மாங்கன்றுகள் வழங்கி வைப்பு!



ஹஸ்பர்-
திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய கிராம சேவகர் பிரிவில் மாங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இன்று (13) பிரதேச செயலகத்தில் வைத்து பயனாளிகளுக்கு மாங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிறுதோட்ட உற்பத்தி கரும்பு மிளகாய் முந்திரிகை இராஜாங்க அமைச்சின் திட்டம் ஊடாக வழங்கப்பட்ட சுமார் 2500 கன்றுகளே இவ்வாறு 12 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய வகையில் வழங்கப்பட்டன. இயற்கையான முறையில் பயிர்களை சொந்த உற்பத்தியில் வளர்ச்சியடையச் செய்யும் நோக்கில் இது வழங்கப்பட்டன. இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் நிஹாத் உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :