க.பொ.த. சாதாரண தர பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்



ரிஹ்மி ஹக்கீம்,கம்பஹா மாவட்ட நிருபர்-
ற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை சிக்கலின்றி நடாத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று பரீட்சைத் திணைக்கத்தில் இன்று (17) நடைபெற்றது.

எதிர்வரும் 23 ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக போக்குவரத்து சிக்கல்களுக்கு மத்தியில் பிரச்சினைகளின்றி பரீட்சையை நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் முப்படைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றுடன் இதற்கு முன்னர் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :