அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் பல மனித நேயப்பணிகள் இடம் பெற்று வருகின்றது
அந்த வகையில் புனித ரமழானை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்தில் அடையாளப்படுத்தப்பட்ட விஷேட தேவையுடையவர்கள் பெண்கள் தலைமைத்துவம் தாங்கும் குடும்பங்கள்,வருமானம் குறைந்தவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள்வழங்கும் நிகழ்வு கல்முனையில் ரஹ்மத் பவுண்டேஷன் காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் (30) நடைபெற்றது.
இந் நிகழ்வானது ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் நேரடி கண்காணிப்பிலும் Y.W.M.A. பேரவையின் ஒருங்கிணைப்பிலும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

0 comments :
Post a Comment