கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணம் வழங்கி வைப்பு



றம்ஸீன் முஹம்மட்-
ல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நீண்ட காலமாக கண் சத்திரசிகிச்சைக்கான கண் வில்லை துல்லியமாக அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் இல்லாமையினால் பல சிரமங்களை நோயாளிகள் எதிர்நோக்கினர்.

இதனை கருத்தில் கொண்டு கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர். என் . நிரோஷனின் வேண்டுகோளுக்கிணங்க வைத்திய அத்தியட்சகர் டாக்டர். இரா.முரளீஸ்வரனின் முயற்சியின் பயனாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பிலிருந்து 25 இலட்சம் பெறுமதியான கண் வில்லை துல்லியமாக அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் அனைத்துலக மருத்துவநல அமைப்பு( ( அமெரிக்கா) சார்பாக இருதய நோய் வைத்திய நிபுணர் டாக்டர். அருள்நிதி அவர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். இரா.முரளீஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் இவ் ” அனைத்துலக மருத்துவநல அமைப்பு ” பல்வேறு இலவச கண் சிகிச்சை முகாம்களை இவ் வைத்தியசாலையில் நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :