சம்மாந்துரற பிரதேச செயலக கலாசாரப்பிரிவின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு



எம்.எம்.ஜெஸ்மின்-
ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார பிரிவு மற்றும் திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின கலையரங்கானது சம்மாந்துறை பெண் கலைஞர்களின் கலை கலாசார நிகழ்வுகளுடன் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனிபா அவர்களின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சி பிரதிப் பிரதம செயலாளர் திருமதி அப்துல் ஜெலீல், அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம், கணக்காளர் ஐ. எம்; பாரிஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் , கலாசார அதிகாரசபை உறுப்பினர்கள,; கலைஞர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் பெண்களின் மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பிலான பிரதான உரைகள் இடம்பெற்றதுடன்
சம்மாந்துறை பிரதேச பெண் ஆளுமை நேர்காணல், மகளிர் தின சிறப்புக் கவிதைஇ மற்றும் நூல் அறிமுகம், போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பெண் ஆளுமைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :