உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டி ஜயவிக்ரம பெண்கள் அநாதை இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டலும் ஆலோசனையும் நிகழ்வொன்று கடந்த வியாளக்கிழமை ( 10 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கண்டி மாவட்டத் தலைவரும் ” எக்லாட் யுனைட்ஸ்” (Eclat Unites ) அமைப்பின் தலைவருமான இஃதிஸான் முஹம்மத் தலைமையின் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கண்டி மாவட்ட உலவள ஆலோசகர் ஷஷீகா அம்மணி . மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சமூகவியல் கற்கும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது ஜே.ஜே.பௌண்டேஸன் அமைப்பினால் அங்குள்ள மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்..
0 comments :
Post a Comment