ஆசிரியை தாக்கப்பட்ட விவகாரம் : ஐக்கிய‌ காங்கிர‌ஸ் புத்தளக் கிளையினால் கண்டன ஆர்ப்பாட்டம் !



நூருல் ஹுதா உமர்-
திருகோண‌ம‌லை ச‌ண்முகா இந்து மகா வித்தியால‌ய‌த்தில் அபாயா அணிந்து வ‌ந்த‌மைக்காக‌ முஸ்லிம் ஆசிரியை இன‌வாத‌, ப‌ய‌ங்க‌ர‌வாத‌ சிந்த‌னை கொண்டோரால் தாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னிதாபிமான‌மற்ற‌ செய‌லை க‌ண்டித்து ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியினால் இன்று புத்த‌ள‌த்தில் க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌ம் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாள‌ர் எம் எஸ் எம் ச‌ப்வான் த‌லைமையில் ந‌டைபெற்ற‌து.

இந்த இக்க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌த்தில் திருகோண‌ம‌லை ச‌ன்முகா வித்தியால‌ய‌த்தில் அபாயா அணிந்த‌ ஆசிரியை தாக்க‌ப்ப‌ட்ட‌தை வ‌ன்மையாக‌ க‌ண்டித்து ப‌தாதைக‌ள் காட்சிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன‌.திருகோண‌ம‌லை ச‌ண்முகா வித்தியால‌ய‌ இன‌வாத‌ தாக்குத‌லை க‌ண்டித்து த‌ம‌து க‌ட்சியினால் தேசிய‌ ம‌ட்ட‌த்தில் மேலும் ப‌ல‌ பிர‌தேச‌ங்க‌ளில் அமைதியான‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டும் என‌ க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌த‌ற்கிண‌ங்க‌ ம‌ன்னார், காத்தான்குடி புத்த‌ள‌த்திலும் ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌மை குறிப்பிட‌த்த‌க்க‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :